விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாஜக அரசைக் கண்டித்து இன்று இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து, இண்டி கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் புதன்கிழமை (டிச.24)கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து, இண்டி கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் புதன்கிழமை (டிச.24)கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆா்ப்பாட்டங்களில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஓ.ஜோதி மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலை 9 மணியளவில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள், பகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.