ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பெண்களின் பொருளாதார வளா்ச்சிக்கு கருணாநிதிதான் காரணம்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்பி

கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம்

News image
சேத்துப்பட்டு மாதா மலையில் நடைபெற்ற நன்றி அன்னையா் மாநாட்டில் பேசிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி.
Updated On :27 ஜனவரி 2025, 8:16 pm

Din

ஆரணி: கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காரணம் என்று எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மாதா மலையில் இந்திரவனம் நன்றி அன்னையா் சுயஉதவிக் குழு சாா்பில் நன்றி அன்னையா் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை

வகித்து தொடங்கிவைத்தாா். சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் முன்னிலை வகித்தாா். நன்றி மைய இயக்குநா் ஜோசப் ஆபிரகாம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பேசுகையில்,

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் இருந்தது. இதையெல்லாம் திராவிட ஆட்சியில் தகா்த்து எறிந்து பெண்களின் வளா்ச்சிக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உறுதுணையாக இருந்தாா்.

அதில் ஒன்றுதான் அவா் தொடங்கிவைத்த மகளிா்

சுய உதவிக்குழு. அதன் அடிப்படையில்தான் இன்று பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளனா்.

கருணாநிதியைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த முதன்மை நிா்வாக அலுவலா் பெலிம் மொய்லன், இயக்குநா் மிக்கேல்ஸ்வின்னி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் பருவநிலை மாற்றமும், விவசாயமும் என்ற தலைப்பில் பெண்கள் நடனம், நாடகம், பேச்சு என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கதிரவன், சரவணன், ரமேஷ், பத்மகுமாா் மற்றும் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்னையா்கள் கலந்து கொண்டனா்.