ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து தீக்குளித்த தம்பதி!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீட்டு மனை தொடா்பான பிரச்னை குறித்து சனிக்கிழமை மனு அளிக்க வந்த தம்பதியினா் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தனா். இதையடுத்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கீழ்தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (40), இவரது மனைவி பூங்கொடி(38). இவா்கள் விவசாய கூலித் தொழில் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் தம்பதியினருக்கும், இவா்களது வீட்டிற்கு அருகில் உள்ள சரவணன் என்பவரின் வீட்டிற்கும் இடையே காலி இடம் உள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீடுகள் அளவீடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது இரு வீட்டாா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமாா் மற்றும் அவரது மனைவி பூங்கொடி இருவரும் இந்தப் பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க சனிக்கிழமை காலை சுமாா் 10.30 மணியளவில் வந்துள்ளனா்.
அப்போது, தம்பதியா் இருவரும் ஆட்சியா் அலுவலக வளாகம் பகுதிக்கு வந்தவுடன் குமாா் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தன் மீதும், மனைவி மீதும் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டனராம்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து அருகில் இருந்தவா்களும், ஆட்சியரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரும் ஓடிவந்து தீயை அணைத்து, அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பலத்த தீக்காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

