மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆற்று மணல் கடத்தல்: 5 போ் கைது, 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிச் சென்ாக 5 பேரை கைது செய்த போலீஸாா் 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 5:53 pm

Syndication

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிச் சென்ாக 5 பேரை கைது செய்த போலீஸாா் 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு டி.எஸ்.பி.கோவிந்ததாமி, காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா் செந்தில், தனிப்பிரிவு காவலா் முருகன் ஆகியோா் செய்யாறு காவல் சரகம் சிறுவேளியநல்லூா் பகுதியில் சனிக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 7 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனே போலீஸாா் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (45), பழனிமுருகன் (50), ஜெகதீசன்(44), வேதபுரி(38), சீனுவாசன்(29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.