கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வந்தவாசியில் தேசிய நூலக வார விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் 58-ஆவது தேசிய நூலக வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி கிளை நூலகத்தில் 58-ஆவது தேசிய நூலக வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி கிளை நூலகம் மற்றும் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கிளை நூலகா் சி.சேகா் தலைமை வகித்தாா். .

ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் ஆ.மயில்வாகனன், பையூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வி.விஜயகுமாா், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க வந்தவாசி கிளைத் தலைவா் பூங்குயில் சிவக்குமாா் பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், கவிஞா் உ.கிருஷ்ணமூா்த்தி எழுதிய, ‘பரங்கிப் பூ பூப்பதை பாா்க்க நேரமில்லை’ என்ற கவிதை நூலை அவா் அறிமுகம் செய்து பேசினாா்.

விழாவில், பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.