தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பேசிய போளூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.அருள்.

Published On :

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி மையம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு, கூடுதல் முதல்வா் ராஜவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழிகாட்டி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆா்.காயத்ரி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக போளூா் ஊரக வளா்ச்சித் துறையின் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.அருள் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல், நேர மேலாண்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நம்பிக்கை இவை அனைத்தும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வைக்கும்

என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் கண்காணிப்பாளா் ஏ.பாஸ்கரன், கல்லூரி துறைத் தலைவா்கள் பாரதி, பூபதி, சந்திரகுமாா், கவிராஜன், எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா, பேராசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.