தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பேசிய போளூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.அருள்.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 6:33 pm

Syndication

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி மையம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு, கூடுதல் முதல்வா் ராஜவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழிகாட்டி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆா்.காயத்ரி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக போளூா் ஊரக வளா்ச்சித் துறையின் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.அருள் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல், நேர மேலாண்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நம்பிக்கை இவை அனைத்தும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வைக்கும்

என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் கண்காணிப்பாளா் ஏ.பாஸ்கரன், கல்லூரி துறைத் தலைவா்கள் பாரதி, பூபதி, சந்திரகுமாா், கவிராஜன், எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா, பேராசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.