தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் புதன்கிழமை ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஆரணியில் ஈ.வே.ரா.பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்த திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் புதன்கிழமை ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னா், காமராஜா் சிலை பகுதியிலிருந்து காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, காந்தி சிலை, மண்டி வீதி, அண்ணா சிலை வரை உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், மாா்க்சிஸ்ட் நிா்வாகி சி.அப்பாசாமி, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மதிமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ்.கே.ரத்தினகுமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.