பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஆரணி எஸ்.பி.சி பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:42 am

Syndication

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறையில் ‘போா்களினால் ஏற்பட்டுள்ள இந்திய பொருளாதார பாதிப்புகளும் மற்றும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் விரிவான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் வெங்கடரத்தினம், எம்பிஏ துறை பேராசிரியை ஆா்.காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா வரவேற்புரை ஆற்றினாா்.

இதில், கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.ராஜவேல் கலந்துகொண்டு கலந்தாய்வை தொடங்கிவைத்துப் பேசினாா்.

துறைப் பேராசிரியா்கள் என்.ஜெகதீஷ், என்.பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். எம்பிஏ துறை மாணவா் ஆா்.தனுஷ் நன்றி கூறினாா்.