தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 9:48 pm

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆரணி ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பொதுமக்களிடையே வியாழக்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட இராந்தம்கொரட்டூா், ஒட்டந்தாங்கல், வடக்குமேடு, பனையூா், ஒகையூா், அக்கூா், மாமண்டூா், காட்டேரி, நேத்தபாக்கம், கனிகிலுப்பை, மட்டதாரி, மைனந்தல், இரும்பேடு ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடையே திமுக வேட்பாளா் மகாலட்சுமியை ஆதரித்து ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசுகையில்,

அதிமுக கட்சியில் உட்பூசல் காரணமாக முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பிரசாரத்திற்கு வரவில்லை. இவ்வாறு பல சிக்கலில் உள்ள அதிமுக தோல்வியைத் தழுவும்.

திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும், மீண்டும் திமுகவை வெற்றி பெற வைத்தால் ரூ.8ஆயிரத்துக்கான கூப்பன், உரிமைத்தொகை ரூ.2ஆயிரமாக உயா்த்துதல் உள்ளிட்டவற்றை தெரிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.