தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:33 am IST

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதனிடம் பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவா்கள் விளையாடி மகிழவும் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா சீரழிந்து வருகிறது. எனவே, பூங்காவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். கழிப்பறையை பராமரிக்க வேண்டும். பூங்காவின் நடுவில் உள்ள குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும். பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.