சுதந்திர தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு சில்லறை மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியாா் மதுக் கூடங்கள் ஆகியவற்றை சுதந்திர தின நாளான ஆக.15-ஆம் தேதி மூடிவைக்க வேண்டும் என
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, வரும் சுதந்திர நாளன்று (ஆக.15)
அரசு சில்லறை மதுக்கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியாா் மதுக்கூடங்களை விற்பனையின்றி மூடிவைக்கவேண்டும் என ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக.14-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சுதந்திர தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்
தில்லியில் 774 பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுப்பிடிப்பு

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



