மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதிய கலையரங்கங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

ஆரணியை அடுத்த நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

நேத்தபாக்கம் கிராமத்தில் கலையரங்கத்தை திறந்துவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:34 pm

ஆரணியை அடுத்த நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நேத்தபாக்கம், சதுப்பேரிபாளையம் கிராமங்களில் கலையரங்கம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனா். இதன் பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், கலையரங்கங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்வுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, கலையரங்கங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் ஞானப்பிரகாசம் செய்திருந்தாா்.