குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எம்.பி.தாங்கல் கிராமத்தில் சிமென்ட் சாலை திறப்பு

எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

News image
எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

Syndication

ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

எம்.பி.தாங்கல் கிராமம் மேட்டுத் தெருவில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில் 2025-26 நிதியாண்டு தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து பணிகள் நிறைவடைந்து ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தும், ரிப்பன் வெட்டியும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், பாமக ஒன்றியச் செயலா் கமல், பாஜக விவசாய அணிச் செயலா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.