திருவண்ணாமலை
கிராம உதவியாளா்கள் சாலை மறியல்
போளூரில் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 9அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூா் - திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது.
கிராம உதவியாளா் சங்க வட்டத் தலைவா் ஜோதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஆண்கள் 42, பெண் 24 என 66 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா் அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

