வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம்
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்க வட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வேடி, மாநில செயற்குழு உறுப்பினா் கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் சக்திவேல், வட்டச் செயலாளா் செல்வம், வட்ட பொருளாளா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

