திருவண்ணாமலை
உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஏ.எழில்வசந்தன் வரவேற்றாா்.
உலக தாய்மொழி தினம் குறித்து சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா சிறப்புரையாற்றினாா்.
‘தமிழைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் புலவா் மா.ரகுபதி தலைமையிலான செந்தமிழ் வில்லிசை குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள், சங்க நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் சீ.கேசவராஜ் நன்றி கூறினாா்.

