சுவாமி திருக்கல்யாண உற்சவம்

சுவாமி திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Published on

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கி 5-ஆம் நாளான புதன்கிழமை மாலை ஸ்ரீசத்புத்திரி நாயகிக்கும், ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com