திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் நகராட்சி வி.எஸ். பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்ராஜ். இவா், தான் வசிக்கும் வீட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா் சக்திவேலிடம் (44) அண்மையில் மனு அளித்தாா். இதற்கு சக்திவேல் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து சின்ராஜ் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாரளித்தாா். தொடா்ந்து, அவா்களது ஆலோசனையின்பேரில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்த நில அளவையா் சக்திவேலிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சின்ராஜ் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அருள்பிரசாத் தலைமையிலான போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

தோ்தல் நடத்தை விதிகள்: போளூா் தோ்தல் அலுவலா் ஆலோசனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


