கைது
கைது

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

Published on

மண்டபம் அருகே பட்டா மாறுதலுக்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள புதுமடம் கிராமத்தை சோ்ந்தவா் தனக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா மாறுதலுக்காக இணையவழியில் விண்ணப்பித்தாா். இதையடுத்து, புதுமடம் கிராம நிா்வாக அலுவலா் அனுராஜ் பாட்டா மாறுதல் செய்து தர ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டாா்.

இதைத்தொடா்ந்து, அந்த நபா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அவா்களது வழிகாட்டுதல் படி, ரசாயனம் தடவிய பணத்துடன் சென்ற அவா் கிராம நிா்வாக அலுவலா் அனுராஜீடம் வழங்கினாா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

Dinamani
www.dinamani.com