அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதால், வாரிசுச் சான்றுக்காக கடந்த பிப்.26-ஆம் தேதி திடக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சுதாகரை (47) அணுகினாா்.

சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டை நீதிமன்றம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சுதாகரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சுதாகரைக் கைது செய்தனா்.