மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:46 pm

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதால், வாரிசுச் சான்றுக்காக கடந்த பிப்.26-ஆம் தேதி திடக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சுதாகரை (47) அணுகினாா்.

சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டை நீதிமன்றம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சுதாகரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சுதாகரைக் கைது செய்தனா்.