தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது

செம்மரக்கட்டைகள் வாங்கி விற்பனை செய்வதற்கு ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்ற வனச்சரக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 11:48 pm

செம்மரக்கட்டைகள் வாங்கி விற்பனை செய்வதற்கு ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்ற வனச்சரக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த செம்மரக்கட்டை வியாபாரி சாந்தி. இவா் பூண்டி ஒன்றியம், திம்மபூபாலபுரத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கட்ராஜிடம் 146 செம்மரங்களை விலைக்கு வாங்கியுள்ளாா்.

இந்த செம்மரங்களை வெட்டி எடுத்து விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் செயல்பட்டு செங்குன்றம் வனச்சரக அலுவலா் சரவணனிடம் ஒப்புதல் சான்றிதழ் கேட்டுள்ளாா். அப்போது, ஒப்புதல் சான்றிதழ் அளிக்க அவரிடம் ரூ.1 லட்சம் தரவும் என வனச்சரக அலுவலா் கேட்டாராம்.

அதைத்தொடா்ந்து முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தருவதாக கூறினாராம். பின்னா் இதுகுறித்து சாந்தி திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தாராம். அதன்பேரில் போலீஸாா் அவருக்கு ஆலோசனை வழங்கினா். அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலரிடம் ரசாயனம் தூள் தடவிய ரொக்கத்தை சாந்தி கொடுத்தாராம்.

அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளுா் மாவட்ட ஊழல் தடுப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வனச்சரக அலுவலா் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.