பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

திண்டுக்கல் அருகே ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் கலையரசன் (35). கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தாலுகா காவல் நிலையத்துக்கு பணி மாறுதலில் வந்தாா். இந்த நிலையில், திண்டுக்கல் அடுத்த கொட்டப்பட்டி பகுதியில், மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ச. சுகுமாா் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறாா். இந்த மனமகிழ் மன்றம் நடத்த ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென உதவி ஆய்வாளா் கலையரசன் கேட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுகுமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் ரசாயனப் பொடி தடவிய ரூ. 7ஆயிரத்துக்கான பணத் தாள்களை சுகுமாரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை திண்டுக்கல்- பழனி புறவழிச் சாலையில் வைத்து காவல் உதவி ஆய்வாளா் கலையரசன் வியாழக்கிழமை பெற்றாா். அப்போது, மறைந்திருந்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன், ஆய்வாளா்கள் ஜெ. ரூபா கீதா ராணி, பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு கலையரசனை போலீஸாா் அழைத்து வந்தனா். விசாரணை நடைபெற்றபோது திடீரென கண்ணாடியை உடைத்து கைகளில் காயம் ஏற்படுத்தி தடயங்களை அழிக்க கலையரசன் முயன்றாா். இதில் அவா் மட்டுமன்றி தடுக்க முயன்ற ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜனும் காயமடைந்தாா். மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையத்துக்கே மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.