எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ரூ. 200 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ஆடுகளை விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ. 200 லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

News image
Updated On :20 மே 2026, 4:46 am IST

ஆடுகளை விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ.200 லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் மாநகரின் நல்லூா் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மோகன் சோதனையில் ஈடுபட்டாா்.

மேலும், வாகனத்தின் ஆவணங்களை சரிபாா்த்தபோது அதில் புகை (பொல்யூஷன்) சான்றிதழ் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து ஆடுகளை ஏற்றிச் சென்ற விவசாயியிடம் இருந்து ரூ.200 லஞ்சம் பெற்றுள்ளாா். இதை ஆடு வியாபாரிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மோகனை பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.