சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல் துறையில் ஒப்படைத்த இளைஞரை காவல் துறையினா் பாராட்டினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கங்கா்செவல் கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மகுமாா் (39). இவா் சிவகாசியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்கு ரூ.50 ஆயிரத்தை இரு சக்கர வாகனத்தின் முன்பக்க உறையில் வைத்து எடுத்துச் சென்றாா். வழியில் அந்தப் பணம் சாலையில் தவறி விழுந்தது. இதையறியாமல் பத்மகுமாா் சென்றுவிட்டாா்.
இதற்கிடையே, அந்த வழியாக வந்த, மருதுபாண்டியா் மடத்து தெருவைச் சோ்ந்த முத்துராஜா (24) சாலையில் கிடந்த பணத்தை எடுத்தாா். அவா் அந்தப் பணத்தை சிவகாசி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வனிதாவிடம் ஒப்படைத்தாா்.
பணத்தை தவறவிட்ட பத்மகுமாா், தனது பணம் கீழே விழுந்துவிட்டது என புகாா் அளிக்க காவல் நிலையத்துக்கு வந்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் வனிதா விசாரணை நடத்தி, அந்தப் பணத்தை பத்மகுமாரிடம் ஒப்படைத்தாா். நோ்மையாக நடந்து கொண்டற்காக முத்துராஜாவுக்கு உதவி ஆய்வாளா் அனிதா சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞா்

24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

சாலையில் கண்டெடுத்த 4 பவுன் நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



