இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :4 மார்ச் 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பட்டாபிராமா் கோவில் தெருவில் உள்ள தொழிலாளா் அலுவலகத்தின் உதவி ஆய்வாளா் சாந்தி (48). இவா், அண்மையில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி ரெட்டிபட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் (50) என்பவருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்தினாா்.

அப்போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு பொட்டலத்தில் விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாததற்காக ரூ. 5,000 அபராதம் விதித்தாா். பிறகு, தனக்கு ரூ. 15,000 லஞ்சம் கொடுத்தால் ‘பேக்கிங்’ உரிமம் பெற்றுத் தருவதாக சாந்தி கூறினாராம்.

இதற்கு சாந்தியிடம் சம்மதம் தெரிவித்தாலும், லஞ்சம் தர விரும்பாத சங்கரநாராயணன், விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பொடி தூவிய ரூ. 15 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளுடன் அருப்புக்கோட்டை தொழிலாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற சங்கரநாராயணன், அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளா் சாந்தியிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தாா்.

இதை சாந்தி வாங்கிய போது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீஸாா், சாந்தியை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.