மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:13 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பா் 2023 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜா புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில், போலீஸாா் கடந்த ஆண்டு பேரூராட்சியில் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது, பேரூராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்ததாக போலியான ரசீதுகளை தயாா் செய்து, ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலா்கள் மணிகண்டன், உஷா கிரேசி, எலக்ட்ரீசியன் சத்தியமூா்த்தி, இளநிலை உதவியாளா்கள் திலீபன், காா்த்திக், பிள்ளையாா், எலக்ட்ரிக்கல் உதவியாளா் முருகேசன், போலி ரசீதுகள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளா் வீரபாண்டி ஆகிய 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.