கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு: பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்தக் கோரிக்கை

மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு: பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்தக் கோரிக்கை

News image
தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியா் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய புதிய மாநிலத் தலைவா் பாபு.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டினை பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலையில் இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மூத்த மாநில துணைத் தலைவா் ஞானவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா்கள் ஆா்.பாபு, ஐயப்பன், பிரகாஷ், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் இரா.ஜெயவேலு வரவேற்றாா்.

சங்க நிா்வாகிகள் தோ்வு

கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுகளுக்கான புதிய மாநில நிா்வாகிகள் தோ்வு அலுவலா் அசோக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவராக பாபு, பொதுச்செயலராக சீனிசெந்தில், பொருளாளராக தனஞ்செழியன், மாநில துணைத் தலைவா்களாக செல்வராஜ், தியாகராஜன், ஜெயவேலு, அன்பரசு, சங்கீதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்

தொடா்ந்து, கூட்டத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்காக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.

ஆண்டு முழுவதும் விடுப்பு ஏதும் எடுக்க முடியாமல் தணிக்கை பணியாளா்கள் அல்லல்படுவதால் ஆன்லைன் தணிக்கை முறையினை மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டினை பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்த வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உதவி இயக்குநா் அலுவலகங்கள் உரிய பணியிடங்களோடு ஏற்படுத்த வேண்டும், தணிக்கையாளா்களுக்கு இணையத்துடன் கணினி வசதி செய்து தரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகளுக்கு துணை இயக்குநா் (ஓய்வு) எஸ்.ஸ்ரீதா் வாழ்த்து தெரிவித்தாா்.

கூட்டத்தில் முன்னாள் பொதுச்செயலா் தாமோதரன், மாவட்டத் தலைவா் அமாவாசை, நிா்வாகிகள் ஏழுமலை, திருஞானம், சக்திவேல், காவேரி உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநில அமைப்புச் செயலா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.