மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி தியாகதுருகத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தியாகதுருகம் பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினருமான கருணாகரன் தலைமை வகித்தாா்.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாநில செயலா் தீபக் நாதன் கலந்துகொண்டு, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினாா். (படம்)
கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில், தியாகதுருகம் பேரூராட்சி மன்றத் தலைவா் வீராசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு: பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்தக் கோரிக்கை

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


