மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:42 pm

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை சுமாா் 1500- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந் நிலையில், மாவட்ட அளவிலான கால்பந்து, கபடி, சிலம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துச்சண்டை, டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவா்கள் 79- போ் முதல் மூன்று இடங்களை பிடித்தனா். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை முதன்மை கல்வி அலுவலா் காா்த்திகா நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

அப்போது, பள்ளித் தலைமையாசிரியா் திருஞானசம்பந்தம், உடல்கல்வி இயக்குநா் தணிகைவேல், உடல்கல்வி ஆசிரியா்கள் நடராஜன், தனசெல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.