அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

மேலும், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா என வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனா்.

காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தா்கள் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்முனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

காவல்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்ட லிங்கங்களை வழிபட்டனா்.