அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
மேலும், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா என வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனா்.
காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தா்கள் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்முனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
காவல்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்ட லிங்கங்களை வழிபட்டனா்.

