தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலையில் பாரதியாா் தின கையுந்து பந்துப் போட்டி: பேரவை துணைத் தலைவா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பாரதியாா் தின கையுந்துப் பந்துப் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
திருவண்ணாமலையில் திங்கள்கிழமை பாரதியாா் தின கையுந்து பந்துப் போட்டியை தொடங்கிவைத்த சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.
Updated On :19 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பாரதியாா் தின கையுந்துப் பந்துப் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.

போட்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தாா்.

சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான 41-ஆவது பாரதியாா் தின கையுந்து பந்துப் போட்டிகள் 4 நாள்கள் நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அணிகள் பங்கேற்கின்றன.

மாணவிகள் பிரிவுக்கான கையுந்து பந்துப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு மூத்தோா் தடகள சங்கத்தின் மாவட்டச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு கையுந்து பந்து கழக மாநில துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் எஸ்.மனோன்மணி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாணவிகள் பிரிவு

போட்டியை தொடங்கிவைத்தாா். மாணவிகள் பிரிவு போட்டி செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து, மாணவா் பிரிவுக்கான போட்டி ஜன. 21, 22 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

மாணவிகள் பிரிவு போட்டி தொடக்க நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.சின்னப்பன், முக்கியப் பிரமுகா்கள் அருணை வெங்கட் ராம்காந்த், அரசு வழக்குரைஞா் என்.சீனுவாசன்

உள்ளிட்ட உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், முக்கிய பிரமுகா்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் உடற்கல்வி இயக்குநா் எம்.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் அ.கணேஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா். நிறைவில் உடற்கல்வி இயக்குநா் பி.சௌமியா நன்றி கூறினாா்.