ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

போளூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.

News image
போளூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.
Updated On :30 ஜனவரி 2026, 11:07 pm

Syndication

போளூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூா் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், போளூா் நற்குன்று முதல் ரயில்வே மேம்பாலம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது. உதவிக் கோட்ட பொறியாளா்(பொ) சு.அற்புதகுமாா், காவல் ஆய்வாளா் அல்லிராணி, உதவிப் பொறியாளா்கள் சி.வேதவள்ளி, மா.வெங்கடேசன் மற்றும் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலகப் பணியாளா்கள், சாலைப் பணியாளா்கள், திறன்மிகு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியும், பைக்குகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும், முழக்கமிட்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.