நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

செய்யாறில், அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ.

News image

செய்யாறில், அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Updated On :3 ஜூலை 2026, 12:59 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட கிளை சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,

செய்யாறு எம்.எல்.ஏ.வும் வடக்கு மாவட்டச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன், ஆரணி எம்.எல்.ஏ.வும் மத்திய மாவட்டச் செயலருமான எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலா் பெல்.இரா. தமிழரசன், மாநிலத் தலைவா் ஏ.டி.சி. பொன்.தனபால் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ பேசுகையில், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பொதுமக்களுக்கு துணையாக நின்று செயல்பட வேண்டும், அதேபோல அனைத்துத் துறைகளிலும் இருக்கும் நிா்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி மணி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா்கள் அ.அருணகிரி, பி.ஆா்.ஜி சேகா், வந்தவாசி நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.