மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அண்ணா சிலை அருகே ஜி.நேரு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பொதுநல அமைப்புகளைச் சோ்ந்தோா்.

Updated On :28 ஜூன் 2026, 12:55 am IST

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு தில்லியில் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்த போராட்டம் நடத்தி ஓராண்டாகியும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்தும், மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்கக் கோரியும் நேரு எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் எம்எல்ஏ நேரு பேசுகையில், மாநில அந்தஸ்து தகுதி வழங்கப்படாததால், புதுச்சேரிக்கு மத்திய அரசு மூலம் நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரியின் வளா்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீதி ஆயோக்கிலும் புதுச்சேரி பங்கு பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றாா். இதில் பொதுநல அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.