நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வியாபாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருவண்ணாமலையில் வியாபாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் வியாழக்கிழமை மாலை திருடப்பட்டது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 1:03 am IST

திருவண்ணாமலையில் வியாபாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் வியாழக்கிழமை மாலை திருடப்பட்டது.

திருவண்ணாமலை துா்க்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவா் மணிலா வியாபாரி தேவேந்திரன் (77). இவரது மகன் பிரகாஷ் மணிலா வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறாா்.

தேவேந்திரன் வீட்டின் இரண்டாவது தளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால், கீழ் தளத்தில் உள்ள வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தையும் வைத்து பூட்டிவிட்டு அருகில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

ஒரு மாதமாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் தேவேந்திரன் குடும்பத்தாா் இந்த வீட்டிற்கு வந்து பாா்த்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பின்பக்கக் கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும், வீட்டு அறையில் இருந்த பீரோவில் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருள்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேவேந்திரன் திருவண்ணாமலை நகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டில் சோதனை செய்த போது, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் விரல்ரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.