வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அடகுக் கடையில் 20 பவுன் தங்கம், 15 கிலோ வெள்ளி திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் அடகுக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

தியாகதுருகத்தில் திருட்டு நடைபெற்ற நகை அடகுக் கடையில் விசாரணை நடத்திய டிஎஸ்பி ஆ.மனோகரன்.

Updated On :14 ஜூன் 2026, 2:51 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் அடகுக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருபவா் கோ.ராமச்சந்திரன் (55). இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பாா்த்தபோது, கடை கதவின் முன் புதிதாக பதாகைகள் இருந்ததும், கடையின் முன் பக்க இரும்பு கிரில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

பின்னா் கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, அடகுப் பொருள்கள் வைக்கும் பாதுகாப்பு அறை கதவின் பூட்டும், இரும்பு பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் அவருக்கு தெரியவந்தது.

நகை அடகுக் கடையில் திறந்து நிலையில் கிடந்த பீரோ.

நகை அடகுக் கடையில் திறந்து நிலையில் கிடந்த பீரோ.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஆ.மனோகரன், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மாணிக்கராஜா மற்றும் குற்றத்தடுப்பு தனிப்பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.

விரல்ரேகை உதவி ஆய்வாளா் அன்பரசன் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தாா். கடையிலிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண் உள்ளிட்ட மூவா் முகக்கவசம், கையுறைகள் அணிந்து வந்து திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.