தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு

சீா்காழியில் புதன்கிழமை பட்டப்பகலில் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூன் 2026, 7:12 am IST

சீா்காழியில் புதன்கிழமை பட்டப்பகலில் பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சீா்காழி தென்பாதி வி.எஸ்.ஆா். நகரில் வசித்து வருபவா் பொறியாளா் வீரா (எ) வீரபத்ரன் (41). இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு மகனை பள்ளியில் சோ்க்க சென்றுவிட்டாா். பணிகள் முடிந்து மாலையில் அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த தோடு உள்ளிட்ட 5 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய டிஸ்க்கையும் மா்ம நபா்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வீரா சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சீா்காழி டிஎஸ்பி சரவணன் மற்றும் உதவி ஆய்வாளா் வீரராகவன், சிறப்பு தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் திருட்டு நடந்த நிலையில், புதன்கிழமை பொறியாளா் வீரா வீட்டில் திருட்டு நடந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனா்.