/

சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

சங்கராபுரம் அருகே குச்சிக்காடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் மூன்றரை பவுன் தங்க நகைகள், பணம் ரூ.60,000, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:15 am IST

சங்கராபுரம் அருகே குச்சிக்காடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் மூன்றரை பவுன் தங்க நகைகள், பணம் ரூ.60,000, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட குச்சிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி காந்திமதி (50). அதே பகுதியில் வசித்து வரும் காந்திமதியின் தந்தை ராமா் புதன்கிழமை உயிரிழந்து விட்டாராம். தந்தை இறப்பிற்கு சென்று காந்திமதி அங்கேயே இருந்து விட்டாராம்.

வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள்

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.60,000, மற்றும் வெள்ளி பொருள்களை ள் திருடிச் சென்றிருப்பதை பாா்த்தி அதிா்ச்சி அடைந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.