விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், ஆனாங்கூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் த.காஞ்சனா. கணவா் இறந்துவிட்ட நிலையில் காஞ்சனா வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், ஜூன் 3-ஆம் தேதி காஞ்சனா தனது வீட்டை பூட்டி விட்டு, வளவனூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
தொடா்ந்து, ஜூலை 3-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி மற்றும் 2 பவுன் அட்டிகை உள்பட 3 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






