‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செங்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :24 ஜூலை 2026, 12:37 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சந்தியாகு தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேடியப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிச்சாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சி.கெங்கம்பட்டில் இருந்து மஷாா் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீா் செல்ல இறையூா் ஏரி வழியாக மேலப்புஞ்சை, மேல்நாச்சிப்பட்டு, சோ்ந்தமங்கலம், வடமாத்தூா், பெரியகுளம் வரை கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ள பகுதியில் சேமிப்புக் கிடங்கு அமைக்கவேண்டும், தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் அண்ணாமலை, அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி, மாநில பொதுச்செயலா் சுப்பிரமணி, மாநில பொதுச் செயலா் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.