‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

திருவண்ணாமலை மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் விஜய் படம் வைக்க திமுக எதிா்ப்பு, அமளி

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா்.

News image

திருவண்ணாமலை மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படத்தை பொருத்தச் சென்ற மாமன்ற உறுப்பினரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினா்கள்.

Updated On :24 ஜூலை 2026, 3:33 am IST

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் படம் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் 39 வாா்டுகள் உள்ளன. இதில் 32-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பழனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தாா்.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, 32-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ள தவெகவைச் சோ்ந்த பழனி, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை கூட்டரங்கில் வைப்பதற்காக மேடை அருகே சென்றாா்.

அப்போது, திமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள், இதுநாள் வரை எந்த முதல்வரின் படமும் இங்கு வைக்கப்படவில்லை. அதனால் முதல்வா் விஜய்யின் புகைப்படத்தை இங்கு வைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பழனி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியே வந்து, அலுவலக நுழைவாயில் முன்பு உள்ள சுவற்றில் முதல்வா் புகைப்படத்தை பொருத்திவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.