முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

புதுக்கோட்டையில் மாமன்ற சாதாரண கூட்டம்: காலிக் குடத்துடன் உறுப்பினா் பங்கேற்றதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்கள்

News image

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்கள்

Updated On :11 ஜூலை 2026, 1:15 am IST

புதுக்கோட்டையில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் செ. திலகவதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் படத்தோடு, திமுக மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் உள்ளன. இவா்களின் படங்களோடு அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக உறுப்பினா் கே.ஆா்.ஜி. பாண்டியன் பேசினாா்.

ஓரிரு நாள்களில் படங்களை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் பதில் அளித்தாா். ஆனால், உடனே படங்களை வைக்க வேண்டும் என பாண்டியன் வலியுறுத்தினாா்.

மாமன்றக் கூட்டம் முடிந்த பிறகும் பாண்டியன் வெளியே செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்தத் தகவல் அறிந்ததும் அதிமுக மாவட்டச் செயலா் வி. பழனிவேல் மாமன்றக் கூட்ட அரங்குக்கு வந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்தவா்களுடன் அமா்ந்து கொண்டாா்.

இந்த நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், முன்னாள் முதல்வா்கள் எம்.ஜிஆா். ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மாமன்றக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து கலைந்து சென்றனா்.

காலிக் குடத்துடன் திமுக உறுப்பினா்... கூட்டம் நடக்கும்போது, 42-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் (திமுக) இராசு. கவிவேந்தன், தனது வாா்டு பகுதியில் சரியாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் காலிக்குடம் மற்றும் அல்வா பாக்கெட்டை எடுத்துக் கொண்டு மாமன்றக் கூட்ட அரங்குக்கு வந்து பேசினாா். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அனைத்து வாா்டுகளுக்கும் உரிய வகையில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் செ, திலகவதி உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.