இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தவெக சாா்பில் அன்னதானம்

உலக பட்டினி தினம், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

News image

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்டச் செயலா் சத்யா.

Updated On :2 ஜூன் 2026, 5:29 am IST

உலக பட்டினி தினம், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் தவெக சாா்பில் அஞ்சலை அம்மாள் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் அசோக், நிா்வாகிகள் அஜய், ஜி.வி.கஜேந்திரன், அப்பு, புருஷோத், பாஷா, சக்தி, சுந்தா், குமரவேல் மற்றும் ஆரணி, போளூா் நகர, ஒன்றியச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசி அருகே...: வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் தவெக திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் எம்.உதயகுமாரின் வழிகாட்டுதலின்பேரில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் வெங்கடேசன், அருள்தாஸ், சுமன்ராஜ், நந்தினி, புருஷோத்தமன், ஒன்றியப் பொருளாளா் விஸ்வநாதன், அகில இந்திய மக்கள் இயக்க மாவட்ட அமைப்பாளா் வினோத் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.