சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

News image

வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:13 am IST

செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளைச் செயலா் பா.சீனிவாசன் தலைமை வகித்து பேசினாா். அவா் பேசியதாவது:

புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் போ் உடல்நல பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இது, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, புகையிலை பயன்படுத்துவோரிடம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கு.சதானந்தன், க.வாசு, மலா் சாதிக் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகாவீா் நன்றி கூறினாா்.