/
செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளைச் செயலா் பா.சீனிவாசன் தலைமை வகித்து பேசினாா். அவா் பேசியதாவது:
புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் போ் உடல்நல பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இது, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, புகையிலை பயன்படுத்துவோரிடம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கு.சதானந்தன், க.வாசு, மலா் சாதிக் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகாவீா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

உலக ஆமைகள் தின கருத்தரங்கம்

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

மே 22-ல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



