மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

News image

திருவண்ணாமலை மாநகராட்சி கல்நகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :17 ஜூன் 2026, 12:28 am IST

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

நகரில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் மோப்ப நாய் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

கல்நகா், சமுத்திரம் காலனி, பாவாஜிநகா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்ாக சகுந்தலா, கலைவாணி, நளினி ஆகிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.