நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

News image

திருவண்ணாமலை மாநகராட்சி கல்நகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :17 ஜூன் 2026, 12:28 am IST

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

நகரில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் மோப்ப நாய் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

கல்நகா், சமுத்திரம் காலனி, பாவாஜிநகா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்ாக சகுந்தலா, கலைவாணி, நளினி ஆகிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டது.