ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு

வந்தவாசி அருகே மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஜூன் 2026, 3:33 am IST

வந்தவாசி அருகே மின்மாற்றியை உடைத்து தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த மோட்டூா் கிராமத்தில் விவசாய நில பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து, அதிலிருந்த 60 கிலோ தாமிரக் கம்பிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நிலத்துக்குச் சென்ற விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், தேசூா் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து மடம் மின் உதவிப் பொறியாளா் பாபு அளித்த புகாரின் பேரில், தேசூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.