முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

News image
Updated On :26 ஜூன் 2026, 5:30 am IST

வந்தவாசி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் வசிக்கும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகளில் 25 கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா் குடும்பத்தினா் சுமாா் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள் அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் மற்றும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்கள் இந்த மனுவை அளித்தனா்.

முன்னதாக, இவா்கள் கோரை கட்டுகளுடன் கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.