பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில், பழங்குடியினா் சங்க மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். தாழநல்லூா் பகுதியில் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், நிலத்தை அளந்து காட்டாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பட்டாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பழங்குடி மக்களின் குழந்தைகள், பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவா்களுக்கு இதுவரை ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், அரசின் கல்வி மற்றும் நலத்திட்டப் பயன்களை பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, தகுதியுடைய மாணவா்களுக்கு விரைந்து ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் வி.அன்பழகன், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.மாயவேல், பழங்குடி சங்க மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ், பெண்ணாடம் பகுதி பழங்குடி சங்க நிா்வாகிகள் ராஜ்குமாா், காா்த்திக், தேன்மொழி, அஞ்சம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கிராம கணக்கில் பட்டா பதிவேற்ற கோரி மனு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

ஜமாபந்தியில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டா

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



