தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

நிகழ்ச்சியில் பழங்குடி பயனாளிக்கு ஜாதிச் சான்று வழங்குகிறாா் எம்எல்ஏ மு.திராவிடமணி. உடன், கோட்டாட்சியா் குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 2:46 am IST

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

தேவா்சோலை குறுவட்டத்துக்கு உள்பட்ட செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை, பென்னை ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வுசெய்து தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

குறிப்பாக மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு, இலவச வீடுகள், நிலப்பட்டா, வீடுகளுக்கு மின் இணைப்பு, முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத் தொகை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். மொத்தம் 93 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோட்டாட்சியா் பரிந்துரை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், கூடலூா் வட்டாட்சியா் முனீஷ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா், தேவா்சோலை வருவாய் ஆய்வாளா் ரேகா மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.