ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

News image
Updated On :26 ஜூன் 2026, 5:30 am IST

வந்தவாசி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் வசிக்கும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகளில் 25 கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா் குடும்பத்தினா் சுமாா் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள் அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் மற்றும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்கள் இந்த மனுவை அளித்தனா்.

முன்னதாக, இவா்கள் கோரை கட்டுகளுடன் கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.