வந்தவாசி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் வசிக்கும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகளில் 25 கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா் குடும்பத்தினா் சுமாா் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.
இதையடுத்து இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள் அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் மற்றும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்கள் இந்த மனுவை அளித்தனா்.
முன்னதாக, இவா்கள் கோரை கட்டுகளுடன் கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜமாபந்தி கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

மனைப் பட்டா கோரி அமைச்சா் வன்னி அரசுடன் நரிக்குறவா்கள் சந்திப்பு

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



